'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர் கதாசிரியர் பி.பாலச்சந்திரன்(62). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்., 5) காலமானார்.
மோகன்லால், மம்முட்டி நடித்த சில படங்களுக்கு கதை எழுதியுள்ள பாலச்சந்திரன், கடந்த 2016ல் துல்கர் சல்மான் நடித்த, விருதுகள் பல பெற்ற கம்மட்டிபாடம் திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் கதாசிரியராக இருந்து கொண்டே, இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வந்தார் மேலும் கேரள சாகித்திய அகாடமி விருது கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, மம்முட்டி நடிப்பில் வெளியான '1'' என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலச்சந்திரன். கம்மட்டிபாடம் படத்தில் பணியாற்றியபோது இவருடன் நெருங்கிப் பழகிய நடிகர் துல்கர் சல்மான் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.