‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை ஆவார். ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்துக்கும், 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி. இதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பாடலுக்கு தான் ஆஸ்கர் வென்றிருந்தார் கீரவாணி.
வயோதிகம் காரணமாக சிவசக்தி தத்தா இன்று காலமானார். அவரின் மறைவை அறிந்த டோலிவுட் உலகம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தமது இரங்கலை வெளியிட்டு உள்ளார்.
மறைந்த சிவசக்தி தத்தா பாடலாசிரியராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். தெலுங்கு சினிமா உலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். சிவசக்தி தத்தாவின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.