‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. சமீபகாலமாக அரசியலில் நுழைந்து பா.ஜ.,வில் இணைந்து எம்பி தேர்தலில் வெற்றிபெற்று தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன்கள் கோகுல் சுரேஷ் மற்றும் மாதவ் சுரேஷ். இதில் கோகுல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். சமீபத்தில் தான் மாதவ் சுரேஷ் ஒரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் மாதவ் சுரேஷ், கேரளாவில் பஸ் டிரைவர்களின் அதிவேக டிரைவிங் குறித்து கண்டிக்கும் விதமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அதில் கூறும்போது, “சமீபத்தில் இரவு நேரம் நானும் என் சகோதரர் கோகுல் சுரேஷும் குருவாயூரில் இருந்து கொச்சிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது எதிர்புறமாக கேரள அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இரண்டும் ஒன்றை ஒன்று முந்தும் விதமாக போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் வந்தன. நூலிழையில் எங்கள் கார் அந்த விபத்தில் இருந்து தப்பியது. இன்னும் ஒரு இன்ச் எங்கள் கார் நகர்ந்து இருந்தாலும் நாங்கள் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்திருப்போம்.
இதுபோன்று பஸ் டிரைவர்களின் அராஜகத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அரசு இதுபோன்ற பேருந்து ஓட்டுநர்களை கட்டுப்படுத்த தவறினால் அல்லது இதே போன்ற விஷயம் திரும்பவும் நடந்தால், தயவுசெய்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள்.. நான் அந்த டிரைவர்களின் பல்லை உடைப்பேன்.. வண்டி டயர்களை துவம்சம் செய்து விடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.