தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகையும், தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி தனது 101வது வயதில் நேற்று காலமானார். 1924ம் ஆண்டு பிறந்தவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார்.
பிரபல இயக்குனரான புல்லையா, குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'அனசுயா' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அப்போது 'துலாபாரம்' நாடகத்தைப் பார்த்தவர் அதில் நடித்த கிருஷ்ணவேணியை 'அனசுயா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தார்.
அப்போது கிருஷ்ணவேணிக்கு 10 வயது. அவருடன் 60 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க அந்தப் படம் முழுவதுமாக கல்கத்தாவில் தயாரானது.
1937ல் சிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, கிருஷ்ணவேணியை சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் கிருஷ்ணவேணி. சொந்தக்குரலில் பாடும் திறமையும் கொண்டவர்.
1940ல் மிர்சாபுரம் ராஜா என்ற பிரபல இயக்குனர், தயாரிப்பாளரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணவேணி. அதன்பின் கணவரது தயாரிப்பில் மட்டுமே நடித்து, அவர்களது ஷோபனாச்சலா ஸ்டுடியோவையும் நிர்வாகம் செய்து வந்தார்.
1942ம் ஆண்டு தெலுங்கு நடிகரான என்டி ராமராவை 'மனதேசம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணவேணி. அந்தப் படத்தை எல்வி பிரசாத் இயக்கினார்.
கிருஷ்ணவேணி மறைவுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.