தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி |
சமீப வருடங்களாக நடிகர் மம்முட்டி, நடிப்பையும் தாண்டி மம்முட்டி கம்பெனி என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார், இவரது தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகள் மற்றும் மம்முட்டிக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டே தயாராகி வருகின்றன, ‛நண்பகல் நேரத்து மயக்கம், பிரம்மயுகம், காதல் ; தி கோர்' என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் இளம் அறிமுக இயக்குனரும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‛குறூப்' படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவருமான ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார்.
வழக்கம் போல இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை ஈர்த்ததால், தானே இந்த படத்தை தயாரித்தும் வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் நடிகரான விநாயகன் நடித்து வருகிறார். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‛கலம்காவல்' என டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் மம்முட்டி சிகரட்டை தனது வாயில் வைத்து கடிப்பது போன்று அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் மீது ஒரு விதமான ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.