வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
பாலிவுட்டையும் தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாகவே வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த வருடம் அவரது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் இதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி சமீபத்தில் தான் இந்த சீசனும் முடிவு பெற்றது. அதேபோலத்தான் கன்னடத்திலும் கடந்த 11 வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனாலும் சினிமாவில் தான் இன்னும் தீவிர கவனம் செலுத்தப் போவதாக இந்த 11வது சீசன் துவங்கும்போதே கூறியிருந்த கிச்சா சுதீப், இந்த சீசனுடன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியிலேயே தான் விடை பெறுவதாக ரசிகர்களிடம் அறிவித்தார் கிச்சா சுதீப். இதைத்தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.