கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் |
மலையாள திரையுலகின் மூத்த எழுத்தாளரும், பிரபல இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் தனது வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 91. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு தங்களது இரங்கல்களையும் இறுதி அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். எம்டி வாசுதேவன் நாயரின் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பெருமளவில் திரைப்படங்களாக மாறி இருக்கின்றன. அந்த வகையில் மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ரெண்டாம் மூழம் என்கிற நாவல் கடந்த பல வருடங்களாகவே திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்து வந்தது.
மகாபாரத கதாபாத்திரங்களில் பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதையை விவரிப்பதாக எழுதியிருந்தார் எம்டி வாசுதேவன் நாயர். இதில் நடிகர் மோகன்லால் பீமனாக நடிப்பதாக இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்த படத்தை மகாபாரதம் என்கிற டைட்டிலில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதற்கு முன் வந்தார். பிரமாண்ட அறிவிப்பும் வெளியானது. மோகன்லாலை வைத்து ஓடியன் என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர்தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் தனது ஸ்கிரிப்ட்டை சொன்ன நாட்களில் பயன்படுத்தவில்லை, படத்தை துவங்கவில்லை என்று கூறி இந்த கதையை படமாக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன நாவலை திரும்ப பெற்றார் எம்டி வாசுதேவன் நாயர். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. அதேசமயம் அவர் எழுதிய 10 சிறுகதைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோரதங்கள் என்கிற பெயரில் ஒரு ஆந்த்ராலஜி படமாக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க ஒரு திரைப்படமாக உருவானது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.