விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
நடிகர் பிருத்விராஜ் முதன்முறையாக டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்து மோகன்லால் வைத்து கடந்த 2019ல் இயக்கிய படம் 'லூசிபர்'. அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பிருத்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தை இயக்கி முடித்துவிட்டார். மோகன்லாலை முதன்முறையாக 'மனசில் விரிஞ்ச பூக்கள்' என்கிற படத்தில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் பாசில், முதல் பாகத்தில் பாதர் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மோகன்லால் இயக்குனர் பாசில் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எனது குருநாதர் பாசில். அவரது குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு மேலாக நெருங்கிய உறவு நீடித்து வருகிறது. அவர் இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்து விட்டேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை லூசிபர் படத்தில் நிறைவேறியது. தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தோம். அவருடன் மீண்டும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.