நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககனாச்சாரி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தலவன் படத்திற்கும், அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இந்தப் படத்தின் 65-வது நாள் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜன கன மன படத்தின் மூலம் போலி என்கவுன்டரை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஜிஸ் ஜாய் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் சம அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்படும் ஈகோ மோதலும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் மையப்படுத்தி எதிர்பாராத கோணத்தில் ஒரு புலனாய்வு படமாக கொடுத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் டீசன்ட்டான வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.