நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஒரு அடார் லவ். புருவ அழகி என அப்போது பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமானது இந்த படத்தில் தான். ஓமர் லுலு என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ஓமர் லுலு மீது போலீசில் புகார் அளித்தார். அதே சமயம் அந்தப்பெண்ணும் தானும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாக கூறிய ஓமர் லுலு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் புகார் அளித்த அந்தப்பெண், புகார் குறித்து முக்கியமான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இயக்குனர் ஓமர் லுலுவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் அந்த ஆதாரங்களை சேதப்படுத்தி விடக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்துள்ளது.