காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஒரு அடார் லவ். புருவ அழகி என அப்போது பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமானது இந்த படத்தில் தான். ஓமர் லுலு என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ஓமர் லுலு மீது போலீசில் புகார் அளித்தார். அதே சமயம் அந்தப்பெண்ணும் தானும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாக கூறிய ஓமர் லுலு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் புகார் அளித்த அந்தப்பெண், புகார் குறித்து முக்கியமான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இயக்குனர் ஓமர் லுலுவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் அந்த ஆதாரங்களை சேதப்படுத்தி விடக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்துள்ளது.