2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிவிதம் படம் வெளியானது. பல வருட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்தில் இசையமைத்த படம் என்கிற பெருமையுடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் படும் கஷ்டங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்பட பட்டியலிலும் இடம் பிடித்தது.
ஆனால் சோதனையாக இந்த படத்தின் ஓடிடி வெளியீடு பல காரணங்களால் தாமதமாகி கொண்டே வந்தது. குறிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்க, ஓடிடி நிறுவனங்கள் அந்த அளவிற்கு விலை கொடுக்க தயங்கி ஓதுங்கி நின்றதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நிலைமை சமூகமாகி நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 19ம் தேதி முதல் இந்த படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் சேர்த்து ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.