தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
நடிகர் திலீப் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. முன்பெல்லாம் கதையில் கவனம் செலுத்திய நடிகர் திலீப் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறாரோ என்று அவரது ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியேனும் வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் திலீப். அந்த வகையில் அவர் தற்போது நடித்துவரும் படம் ‛பா பா பா'. இந்த படத்தில் திலீப்புடன், சகோதர நடிகர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை இயக்குனருடன் சேர்ந்து நடிகை நூரின் ஷெரீப் மற்றும் நடிகர் பஹிம் ஜாபர் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து புருவ அழகி என புகழ்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை போலவே அதில் இன்னொரு கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நூரின் ஷெரீப். கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு தற்போது கதை, டைரக்சனில் கவனத்தை திருப்பியுள்ளார் நூரின் ஷெரீப். இவருடன் இணைந்து இந்த கதையை எழுதும் பஹிம் ஜாபர் இவரது காதல் கணவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.