தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இதில் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண் பீத்தாபுரம் என்கிற தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பவன் கல்யாண் அங்கிருந்து காரில் சென்று ஓட்டளித்தார்.
இதேபோல இயக்குனர் ராஜமவுலி வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயாவுடன் வந்து தனது ஓட்டை செலுத்தினார். அதேபோல நடிகர் பாலகிருஷ்ணா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தினாலும் ஒரு கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தோளில் துண்டு அணிந்திருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.