தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
கடந்த சில நாட்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் ஆவேசம்' என்கிற படம் வெளியானது. ஒரு கேங்ஸ்டர் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 100 கோடி வசூலையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் என யாருமே இல்லை. அதேபோல இந்த ஆவேசம் படத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கும் பஹத் பாசில் எதனால் கேங்ஸ்டர் ஆனார் என்கிற பிளாஷ்பேக் எதுவும் சொல்லப்படவில்லை.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ஜித்து மாதவன், “இந்த கதையில் மூன்று கல்லூரி மாணவர்களின் கண்ணோட்டத்தில் தான் ரங்கா என்கிற தாதா ரசிகர்களுக்கு காட்டப்படுகிறார். அதனால் ரங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது பிளாஷ்பேக் எதுவும் இந்த கதைக்கு தேவைப்படவில்லை. அப்படி வைத்தாலும் அது வழக்கமான கிளிஷேவாகத் தான் இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டோம்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஹாரர் காமெடியாக உருவாகி இருந்த இவரது முதல் படமான ரோமாஞ்சம் படத்தில் கூட பேய்க்கான பிளாஷ்பேக் ஸ்டோரி என எதையும் இவர் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.