அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களுக்குள்ளாகவே முன்னணி இளம் நடிகர்களில் முக்கிய நடிகர், அதிலும் பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் ஒரு பக்கம் கல்கி படத்திலும் இன்னொரு பக்கம் இயக்குனர் ராஜா ஸாப் படத்திலும் மாறி மாறி நடிக்க வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 35 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபாஸ். சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர் சங்க கூட்டத்தின்போது இந்த தகவல் அங்கிருந்த நிர்வாகிகள் மூலமாக வெளியாகி உள்ளது. மறைந்த பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவின் பெருமையை கொண்டாடும் விதமாக வரும் மே நான்காம் தேதி வருடாந்திர இயக்குனர் தினத்தன்று ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் ஒரு மிகப்பெரிய கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தான் பிரபாஸ் அளித்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.