அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

மலையாள திரையுலகின் இளம் இயக்குனர், நடிகர் வினீத் சீனிவாசனுக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழகத்தில் கூட இவரது படங்களுக்கு என ஒரு வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில் வில்லத்தனம் கலந்த ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டி இருந்தார் வினித் சீனிவாசன்.
அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போன்ற கதைகளை என்னால் ஒருபோதும் யோசிக்கக்கூட முடியாது. என்னுடைய பாதை அது அல்ல. அதேசமயம் ஒரு நடிகராக அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இத்தனைக்கும் அந்த படத்தின் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான். என் உதவியாளர் என்பதால் என்னைப் போன்றே தான் படங்கள் பண்ண வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருடைய சிந்தனை வேறு. என்னுடைய சிந்தனை வேறு” என்று கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.