பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி |
கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ள திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒரு சிறிய பூந்தொட்டியை பரிசளித்து உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிஷா. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.