கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக உருவானாலும் சமீபத்தில் டைட்டில் சர்ச்சையில் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பனம்'. இந்த படம் மார்ச் 1ம் தேதியே ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் இடம் பெற்றுள்ள பாரத என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரத என்கிற பெயரை நீக்கிவிட்டு 'ஒரு சர்க்கார் உல்பனம்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டி.வி ரஞ்சித் என்பவர் இயக்கியுள்ளார். 96 புகழ் கவுரி கிஷன், மலையாள முன்னணி காமெடி நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கதாசிரியர் நிசாம் ராவுத்தர் என்பவர் கதை எழுதியுள்ளார். படம் நாளை (மார்ச்-8) வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நிசாம் ராவுத்தர். இவரது வயது 49. இவரது மரணம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன் சச்சாரியாயுடே கர்ப்பிணிகள், பாம்பே மிட்டாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார்.