வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சவுமியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியா ஷெட்டி தனது தோழி வீட்டில் ஒரு கிலோ வரை தங்க நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டபர்த்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் திருட்டு போனது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நடிகை சவுமியா ஷெட்டி நகைகளை திருடியது தெரிய வந்தது.
பிரசாத் பாபுவின் மகள் மவுனிகாவுடன் நட்பை ஏற்படுத்தி அவரது வீட்டுக்கு சவுமியா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பீரோ சாவியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் தங்கி இருந்த சவுமியா ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.