'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதை தான் குறையாக சுட்டிக் காட்டினார்கள். இதன் காரணமாக தோல்வியை தான் இந்த படம் பரிசாக பெற்றுள்ளது.
படம் வரவேற்பு பெறாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹரீஷ் பெராடி வேறொரு வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, “இங்கே மோகன்லாலுக்கு எதிராக ஒரு லாபி செய்யப்பட்டு வருகிறது. அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி வேண்டுமென்றே படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்கிறார்கள். இதுவே இந்த படத்தில் வேறு எந்த ஒரு நடிகர் நடித்திருந்தாலும் நிச்சயமாக வெற்றி படமாகி இருக்கும். ரசிகர்களுக்கு புதுமையை வரவேற்கும் எண்ணம் குறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ஹரீஷ் பெராடி.
மோகன்லாலின் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும் அவரது உழைப்பு வீணாகி விட்டதே என்கிற ஆதங்கத்தாலும் தான் ஹரீஷ் பெராடி இப்படி கூறியுள்ளார்.