காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதை தான் குறையாக சுட்டிக் காட்டினார்கள். இதன் காரணமாக தோல்வியை தான் இந்த படம் பரிசாக பெற்றுள்ளது.
படம் வரவேற்பு பெறாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹரீஷ் பெராடி வேறொரு வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, “இங்கே மோகன்லாலுக்கு எதிராக ஒரு லாபி செய்யப்பட்டு வருகிறது. அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி வேண்டுமென்றே படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்கிறார்கள். இதுவே இந்த படத்தில் வேறு எந்த ஒரு நடிகர் நடித்திருந்தாலும் நிச்சயமாக வெற்றி படமாகி இருக்கும். ரசிகர்களுக்கு புதுமையை வரவேற்கும் எண்ணம் குறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ஹரீஷ் பெராடி.
மோகன்லாலின் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும் அவரது உழைப்பு வீணாகி விட்டதே என்கிற ஆதங்கத்தாலும் தான் ஹரீஷ் பெராடி இப்படி கூறியுள்ளார்.