எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
10 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த, கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றதால், அடுத்ததாக 2016ல் மீண்டும் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்ஷ்ன் ஹீரோ பைஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன். வழக்கமான அதிரடி போலீஸ் படங்கள் போல அல்லாமல் ஒரு நகரத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் அவற்றின் மீது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளும் என புதிய பாணியில் கதை சொல்லியிருந்தார்கள். நிவின்பாலியே தயாரித்திருந்தார்
இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகளை தொட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் நாயகன் நிவின்பாலி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இயக்குனரின் டைரக்சனில் நிவின்பாலி நடித்த மகாவீர்யர் திரைப்படம் சரியாக போகாத நிலையில் மீண்டும் அவரது டைரக்சனிலேயே நிவின்பாலி இந்த படத்தை அறிவித்திருப்பது ஆச்சரியம் தான்.