தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
10 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த, கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றதால், அடுத்ததாக 2016ல் மீண்டும் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்ஷ்ன் ஹீரோ பைஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன். வழக்கமான அதிரடி போலீஸ் படங்கள் போல அல்லாமல் ஒரு நகரத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் அவற்றின் மீது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளும் என புதிய பாணியில் கதை சொல்லியிருந்தார்கள். நிவின்பாலியே தயாரித்திருந்தார்
இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகளை தொட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் நாயகன் நிவின்பாலி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இயக்குனரின் டைரக்சனில் நிவின்பாலி நடித்த மகாவீர்யர் திரைப்படம் சரியாக போகாத நிலையில் மீண்டும் அவரது டைரக்சனிலேயே நிவின்பாலி இந்த படத்தை அறிவித்திருப்பது ஆச்சரியம் தான்.