'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவரது மகன்களான அனூப் சத்யன், துல்கர் சல்மான் நடித்த வரனே ஆவிஷ்யமுண்டு படம் மூலமாகவும், அகில் சத்யன் பஹத் பாஸில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் படம் மூலமாகவும் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். இந்த நிலையில் அகில் சத்யன் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் ஒரு பேண்டஸி ஹாரர் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்திற்கான கதையை உருவாக்க ஒரு வருடத்திற்கு முன்பே வேலையை துவங்கி விட்டேன். ஆனால் எனக்கும் நிவின்பாலிக்கும் பேய் என்றாலே பயம். அதனால் என்னை நானே பயமாக கூடாது என்பதற்காக பகலில் மட்டுமே இந்த படத்தின் கதையை எழுதினேன். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல.. பேண்டஸி படமும் கூட..” என்று கூறியுள்ளார் அகில் சத்யன்.