2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு |

மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் வைசாக். மம்முட்டி, பிரித்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கிய வைசாக் அதற்கு அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் புலி முருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். அதேசமயம் மீண்டும் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவர் மீண்டும் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த படத்திற்கு டர்போ என பெயரிடப்பட்டு பூஜையுடன் துவங்கியுள்ளது. அடுத்த நூறு நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என வைசாக் கூறியுள்ளார்.