மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இரண்டு நடிகர்கள் மீதும், தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை என்கிற புகார்களின் அடிப்படையில் ரெட் கார்டு போடப்பட்டது. அதேசமயம் அவர்கள் ஏற்கனவே நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபடலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஷேன் நிகம் தனது தவறுகளுக்கு பொறுப்பேற்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக அல்லாத ஸ்ரீநாத் பாஷியும் இதேபோன்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து இவர்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவர்கள் புதிய படங்களில் நடிக்கலாம் என்றாலும் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த ரிஸ்க்கில் தான் இவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமே தவிர இவர்கள் குறித்து ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.