காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
மலையாள சினிமாவில் ஆக்சன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே பல வருடங்களாக படம் இயக்கி வந்த ஜோஷி, எல்லா சீனியர் இயக்குனர்களும் ஒரு கட்டத்தில் சந்திக்கும் பின்னடைவை சந்தித்தார். அதை அடுத்து கடந்த 2019ல் மலையாள குணச்சித்திர நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், கோலிசோடா 2வில் வில்லனாக நடித்த செம்பான் வினோத் மற்றும் நடிகை நைலா உஷா ஆகியோரை வைத்து 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றி மூலம்தான் மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற முடியும் என்கிற நிலையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து வழக்கம் போல முன்னணி நடிகர்களை தேடி சொல்லாமல் இதே படத்தில் நடித்த இந்த மூன்று நடிகர்களையும் வைத்தே ஆண்டனி என்கிற படத்தை தற்போது இயக்கிய வருகிறார். இதில் கூடுதலாக கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா படத்தை இயக்கிய அபிலாஷ் ஜோஷி இவரது மகன் தான் என்பதும் தற்போது ஆண்டனியில் நடித்துள்ள செம்பான் வினோத் நைலா உஷா இருவருமே கிங் ஆப் கொத்தா படத்திலும் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது