பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மலையாளம், தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து தனது நடிப்பு எல்லையை விரிவு படுத்தியவர் நடிகை பார்வதி. மற்ற கதாநாயகிகள் போல இல்லாமல் செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, சினிமா சார்ந்த பிரச்னைகள் மற்றும் சமூக விஷயங்களில் அதிக அக்கறை காட்டுபவர். மலையாளத் திரையுலகில் துவங்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு சினிமாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் பார்வதி.
இன்னொரு பக்கம் கேரள அரசின் கீழ் இயங்கி வரும் கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் ஒரு போர்டு மெம்பராக பொறுப்பு வகித்து வந்தார் பார்வதி. இந்த நிலையில் அவர் இந்த கழகத்தின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியாகி உள்ளது.
அதேசமயம் இதற்கு முன்னதாக இந்த திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரிடம், தான் இந்த கழகத்தின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக பார்வதி அனுப்பிய கடிதத்தை தொடர்ந்தே அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.