ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். இவர்கள் இருவரும் பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும், தங்களுக்கு நெருங்கிய நண்பர்களின் விழாக்களிலும் அடிக்கடி ஒன்றாக கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலி சகோதரர் மகள் திருமணத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் அவர்களது மனைவியர் சகிதம் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இவர்கள் நால்வரும் இணைந்து நிற்பது போன்று பையனூர் ஜெயபிரகாஷ் என்கிற புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
காரணம் இதற்கு முன்னதாக இப்படி இவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதன்பிறகு இப்போது தான் இவர்கள் நால்வரும் மீண்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதால் இந்த இரண்டு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.