‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படம் 'அஜயந்தே ரண்டாம் மோஷனம்' வரலாற்று கதையாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்குகிறார். கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். கிர்த்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான இதன் டீசர் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் கேரளாவில் வாழ்ந்த பிரபல திருடனின் கதை. கோயில்களில் மட்டும் திருடுவது அவனது பாணி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. காந்தாரா போன்று ஆன்மிகமும், சமூகமும் கலந்த படமாக உருவாகி உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. டொவினோ தாமஸ் நடித்த '2018' படம் தற்போது 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.