பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கியிருந்தார். ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்று பின்னர் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு மொழிகளையும் தாண்டி தெலுங்கில் இந்த படம் வெளியான போது கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தாங்களே முந்திக்கொண்டு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், வக்கீல் சாப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பவன் கல்யாண் தற்போது தன் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.