இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது ஹாலிவுட்டில் எண்பதுகள் வரை பாப் மியூசிக்கில் கொடிகட்டி பறந்த அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதர இசையமைப்பாளர்களான கார்பென்டர்ஸ் குறித்து. ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலான மீடியாக்களில் தச்சு வேலை செய்பவர்கள் என புரிந்து கொள்ளப்பட்டு, கீரவாணி மரக்கட்டைகளில் தச்சு வேலை செய்யும்போது ஏற்படும் சத்தத்தை கேட்டு வளர்ந்தார் என்கிற அர்த்தத்துடன் செய்திகள் வெளியாகின. இதை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்..