சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள திரையுலகில் சின்னச்சின்ன படங்கள் மூலம், அதே சமயம் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெள்ளிசேரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற எதார்த்த கிராமத்து படம் வெளியானது. தற்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக மோகன்லாலை வைத்து மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அணுகுண்டு சோதனை மூலம் புகழ்பெற்ற பொக்ரான் பகுதியில் மிகப்பெரிய கோட்டை செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே பல மொழிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 300 சண்டைக்கலைஞர்கள் மற்றும் மோகன்லால் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மல்யுத்தம் குறித்து இந்த படம் உருவாவதால் தற்போது பிரம்மாண்ட மல்யுத்த போட்டி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் புலி முருகன் படத்திற்கு பிறகு மீண்டும் மோகன்லாலின் மாஸ் சண்டை காட்சிகளை இந்த படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.