ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தற்போது 'பள்ளிமணி' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். இந்த படத்தின் போஸ்டர் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் பல ஊர்களில் இந்த போ-ஸ்டரில் இடம்பெற்றிருந்த ஸ்வேதா மேனனின் படத்தை மட்டும் யாரோ கிழித்து எறிந்துள்ளனர்.
இந்த படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ஸ்வேதா மேனன் எழுதியிருப்பதாவது: இது விஷமத்தனமான வேலையாக இருக்கிறது. என்றை புறக்கணிக்க பார்க்கிறார்கள். யார் செய்திருந்தாலும் இது கோழைத்தனமான செயல், துணிச்சல் இருந்தால் என் முன்னால் வந்து இதனை செய்யட்டும் அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. அதனால்தான் அவர்களை கோழை என்று சொல்கிறேன். இந்த படம் ஒரு இளம் இயக்குனரின் பல வருட கனவு அதை சிதைக்காதீர்கள். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.