புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வினீத் சீனிவாசன் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் வெளியானது. மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு சில காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ஒரு விழாவில் மலையாள நடிகர் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் நகைச்சுவை நடிகருமான இடவேள பாபு என்பவர் விமர்சித்து பேசியதாக ஒரு பரபரப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இடவேள பாலு வினீத் சீனிவாசன் குறித்தும் அவர் நடித்திருந்த உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ் படம் குறித்தும் நான் தவறாக எதுவும் பேசவில்லை. அந்த படம் மோசமான படம் என்றும் நான் கூறவில்லை. அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பெரியவர்கள் மட்டுமே அந்த படம் பார்க்கலாம் என்கிற விதமாக அந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் வினீத் சீனிவாசன் நடித்திருந்த படம் என்பதால் எல்லோரும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தனது மகனையும் அழைத்துக்கொண்டு வந்ததாக ஒரு வங்கி மேலாளர் என்னிடம் கூறினார். சென்சார் இந்த விஷயத்தில் கண்காணிக்க வேண்டும் என்று தான் நான் அந்த மேடையில் பேசினேன். ஆனால் நான் ஏதோ படம் குறித்து தவறாக பேசிவிட்டேன் என்பது போல அந்த செய்தி திரித்து வெளியாகிவிட்டது. ஆனாலும் அதன்பிறகு அந்த படத்திற்கு இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைத்தது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.