ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட மாத இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்புக்கு என தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சமீப நாட்களாக விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர இருக்கிறது.
இந்த இடைவெளியில் ரசிகர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அல்லு அர்ஜுன். அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது கைகளில் தூக்கி ஏந்தியபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கூட சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் சந்திப்பின்போது இதேபோன்று ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை தனது கைகளில் தூக்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டது அப்போது இதே போல வைரலானது குறிப்பிடத்தக்கது.