பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ | துாக்கம் இல்லாமல் தவிக்கும் ஸ்டார்கள் | பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன் | 'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது | பிளாஷ்பேக்: மார்க்கெட் இழந்ததால் வெளிவராத விஜயன் படம் | பிளாஷ்பேக்: சரஸ்வதி சபதம் உருவாக காரணமான 'கலாவதி' |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டோபர், தெலுங்கில் ஏஜென்ட் என அவரது அடுத்தடுத்த படங்கள் என்கிற ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னொரு பக்கம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் காதல் ; தி கோர் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சற்று ரிலாக்ஸ் ஆன மம்முட்டி, எர்ணாகுளத்தில் உள்ள தான் படித்த சட்டக்கல்லூரிக்கு விடுமுறை தினத்தன்று ஒரு விசிட் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் படித்த அந்த கல்லூரியில் தன்னுடைய வகுப்பறைக்கு சென்று அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் மம்முட்டி. “நாங்கள் படிக்கும் காலத்தில் இங்கே தான் எங்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.. அதே சமயம் இது ஒரு பழைய சட்டசபை போலவும் நீதிமன்றம் போலவும் கூட இருந்தது” என்று தனது மலரும் நினைவுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் மம்முட்டி. அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..