துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூவ்ஸ். உதயதானு தாரம், நோட்புக், மும்பை போலீஸ், காயங்குளம் கொச்சுண்ணி, பிரதி பூவாங்கோழி, ஹவ் ஓல்ட் ஆர் யூ உள்பட பல படங்களை இயக்கியவர். தமிழில் ஜோதிகா ரீ-என்ட்ரி ஆன 36 வயதினிலே படத்தை இயக்கினார். இவர் இயக்கிய சாட்டர்டே நைட் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை மலையாள விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியிருப்பதாவது: 17 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. எவருடைய விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் கவலைப்படுகிறேன். படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகின்றனர். 2 லட்சம் வாங்கிக்கொண்டு, மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று டுவீட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
யுடியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகின்றனர். அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள். நல்ல விமர்சனம் செய்யும் யுடியூபர்கள் குறைவு. படத்தை விமர்சிக்கட்டும், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயத்தை ஏன் இழுக்க வேண்டும்?
இவ்வாறு ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.