போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மலையாள சினிமாவின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியல். இவர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 13வது ஜே.சி.டேனியல் அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிஷாந்த் ஆர் கே இயக்கிய 'அவச வ்யூஹம்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை 'மதுரம்' படத்திற்காக அகமது கபீர் பெறுகிறார். மதுரம், நயத்து, பிரீடம் பைட் ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'உடல்' படத்தில் நடித்ததற்காக துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் 'மேப்படியான்' படத்தில் நடித்ததற்காக சிறப்பு நடுவர் குழுவின் விருதை பெறுகிறார். ஹோலி பாதர் படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் அறிமுக இயக்குனருக்கான விருதை பெறுகிறார்.