2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகை பொறுத்தவரை கொரோனா தாக்கம் படப்பிடிப்பையும் படங்களின் வெளியீட்டையும் நிலைகுலையை வைத்தாலும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் படங்கள் மட்டும் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகி வந்தன. குறிப்பாக திரிஷ்யம்-2, ப்ரோ டாடி, சமீபத்தில் வெளியான டுவல்த் மேன் ஆகிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்களான மரைக்கார் மற்றும் ஆராட்டு ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானாலும் வரவேற்பை பெறத் தவறின.
இந்தநிலையில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் அலோன். நீண்ட நாளைக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதால் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்த படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தில் மோகன்லால் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிட்டால் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஓடிடி தளத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.