நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சமீபத்தில் தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் அவரது மனைவி ஜீவிதா இயக்கத்தில் வெளியான சேகர் என்கிற படம் வெள்ளியன்று வெளியானது. இந்தநிலையில், பைனான்சியர் ஒருவர் அவர்கள் மீது தொடுத்த செக் மோசடி வழக்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் அனைத்து தியேட்டர்களிலும் சேகர் படம் திரையிடப்படுவது நீதிமன்ற உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் இந்த படத்தின் இயக்குனரான ஜீவிதா ராஜசேகர் இந்த படம் நிறுத்தப்பட்டது முறையற்றது என்று கூறி தனது தரப்பு வாதத்தை தனது வழக்கறிஞர் மூலமாக முன் வைத்தார். இதை அடுத்து இந்த படத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது,
இதுகுறித்து டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகர் கூறும்போது, “இந்த படத்தை நிறுத்தியது முறையற்றது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் சேகர் படத்தின் விடுமுறை நாட்களின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் சேகர் திரைப்படம் இழந்த அதனுடைய அங்கீகாரத்தை மீண்டும் பெறும் என நம்புகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை திரையிடுவது குறித்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு உறுதுணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த படத்தை தற்போது உடனடியாக திரையிடாமல் மறு ரிலீஸ் தேதியை அறிவித்து மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.