என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் |
மலையாள முன்னணி நடிகரான திலீப் மீது பிரபல நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு என இரண்டு பெரிய கிரிமினல் வழக்கு நடந்து வருகிறது. திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். விரைவில் நடிகை கடத்தல் வழக்கு முடிவடைய இருக்கிறது. இதில் திலீப்புக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் திலீப் திடீரென்று நேற்று சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தினார். முதல்நாள் இரவே சபரிமலைக்கு வந்து தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை சன்னிதானத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் விரதம் இருந்தவர்கள் அணியும் ஆடையும், மாலையும் அணிந்திருந்தார். அவரது பெயரில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அவருடன் அவரது உதவியாளரும், மானேஜரும் மட்டுமே உடன் வந்திருந்தனர்.
இரண்டு குற்ற வழக்கிலிருந்தும் தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும். தனது கலை பயணமும், வாழ்க்கை பயணமும் எந்தவித இடையூறுமின்றி நடக்க வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்ததாக கூறப்படுகிறது.