தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கில் திலீப்புடன் அவரது மனைவி உள்ளிட்டவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு வழக்கிலும் தொடர்புடைய 11 ஆயிரத்து 161 வீடியோக்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. செல்போனில் அழிக்கப்பட்ட இந்த வீடியோக்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதுதவிர லட்சத்தை தாண்டிய போட்டோக்களும் மீட்கப்பட்டுள்ளதாம்.
இந்த வீடியோ மற்றும் ஆடியோ, போட்டோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பிக்க விவாரணை அதிகாரிகள் 3 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்களாம். காரணம் 6,682 வீடியோக்கள், 10,879 ஆடியோக்கள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க இந்த கால அவகாசம் தேவைப்படுகிறதாம். திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் இந்த வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது என்கிறார்கள்.