300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நாயகன் யாஷ் அழைப்பை ஏற்று, பெங்களூருக்கு சென்ற நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கையோடு இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் கைப்பற்றி வந்துள்ளார் பிரித்விராஜ்.