டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இந்த படத்தின் வெற்றியால் தமிழிலும் மலையாளத்திலும் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்தநிலையில் இரண்டு மின்னல் முரளிகளும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். டொவினோ தாமஸ் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் குரு சோமசுந்தரம். இதுபற்றி தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குரு சோமசுந்தரம் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, “இன்று ஜெய்சனும் ஷிபுவும் சந்தித்துக்கொண்டனர். ஜெய்சன் வீட்டில் எங்களுக்கு அன்பான வரவேற்பும் அருமையான உணவும் கிடைத்தது.. இதனால் ஜெய்சன் மீது இருந்த பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, நான் நல்லவனாக திருந்தி விட்டேன்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் ஜெய்சன் ஆக டொவினோ தாமஸும் ஷிபுவாக குரு சோமசுந்தரமும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.