எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை கடத்தல் வழக்கு முடிவுக்கு வர இருந்த நேரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னணி நடிகர் திலீப் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து திலீப் மீது புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 12 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. என்றாலும் 12 சாட்சிகளில் எட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கலாம் என்று அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. திலீப்பின் உறவினர்களின் செல்போன அழைப்புகளை பரிசோதிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.