திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தான் நடித்து வந்த வெயில் படத்தில் சம்பளம் அதிகமாக கேட்டு தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்து ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளானார். அதன்பின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஷேன் நிகம். அப்படி அவர் நடிக்கும் ஒரு படம் தான் பெர்முடா.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயகியுள்ளார். பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவரும், சில வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை இயக்கியவரும் இவர் தான்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை மோகன்லால் பாடியுள்ளார். டி.கே.ராஜீவ் குமாரின் டைரக்சனில் சில படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கான கொண்டாட்டமான பாடலாக இது இருக்கும் என்பதால் இந்த பாடலை பாடவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் மோகன்லால்.