அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
சைரா நரசிம ரெட்டி படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த படம் வெளியாவதற்கு தான் இடைவெளி ஏற்பட்டுள்ளதே தவிர, அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கணிசமாகத்தான் இருக்கிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்ட சிரஞ்சீவி, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154வது படமும் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி என்பவர் இயக்குகிறார். இந்த படஹ்தின் துவக்க விழா பூஜையில் கலந்துகொண்ட இயக்குனர் வி.வி,விநாயக் கிளாப் அடித்து துவங்கி வைக்க, கேமராவை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஸ்விட்ச் ஆன் பண்ண, முதல் காட்சியை ராகவேந்திரா ராவ் இயக்கினார். இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.