இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குருப் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் நவ-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலைவழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு.. சுகுமார குருப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக்கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சுகுமார குருப்பின் வாழ்க்கை தான் தற்போது படமாக மாறி இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.. இந்தநிலையில் இந்த நிஜ சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான சாக்கோவின் குடும்பத்தினரை அழைத்து தற்போது படத்தை போட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த சாக்கோவின் மகன் ஜிதின், “படத்தை பார்த்த பின்னர் தான் எங்கள் மனதில் இருந்த பல சந்தேகங்களும் தவறான புரிதலும் அகன்றன. இயக்குனர் ஸ்ரீநாத் என் தந்தை பற்றி படமக்கப்போவதாக எங்களிடம் என்ன சொன்னாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளார்” என படம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்..
அதேசமயம் இந்தப்படம் தயாராகி வந்தபோது,. அந்த கிரிமினலான சுகுமார குருப்பின் மனைவி தனது கணவனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தப்படம் இருக்குமோ என தானும் தன் மகனும் சந்தேகப்படுவதாகவும், படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்டிவிட்டே ரிலீஸ் செய்யவேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்கள்.. ஆனால் இதுவரை அவர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்டவில்லை.
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறும்போது, இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குருப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம். குறிப்பாக சுகுமார குருப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என கூறியுள்ளார்.