கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால் அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூட்யூப் சேனல்கள் மீது போலீசில் புகார் அளிதததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார் நடிகை சமந்தா.
இந்தநிலையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்று அதில் நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு சமந்தா விவகாரத்தை தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விரைவில் யூட்யூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த உள்ளாராம் விஷ்ணு மஞ்சு.