ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால் அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூட்யூப் சேனல்கள் மீது போலீசில் புகார் அளிதததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார் நடிகை சமந்தா.
இந்தநிலையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்று அதில் நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு சமந்தா விவகாரத்தை தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விரைவில் யூட்யூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த உள்ளாராம் விஷ்ணு மஞ்சு.