கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாள திரையுலகில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர் பிரித்விராஜை வைத்து 'கடுவா' என்கிற ஆக்சன் படத்தை இயக்கி வந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படம் கடந்த வருடம் துவங்கப்பட்டு ஒரு சில சிக்கல்களாலும் கொரோனா ஊரடங்காலும் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படியே நின்றது.
அதையடுத்து பிரித்விராஜ் சில படங்களில் நடித்துவிட்டு, மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அதேபோல ஷாஜி கைலாஷும் மோகன்லாலை வைத்து குறுகிய நாட்களிலேயே அலோன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இதற்குள் கடுவா படத்திற்கு எழுந்த சில பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஒரு இளம் தோட்டக்காரனை பற்றிய கதையாக உருவாகும் இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றியாக கதையாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.