சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்களைத் திறப்பதை காலம் தாழ்த்தியே வந்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என மாநில அரசு சற்று முன் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முன்னதாகத் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், கங்கனா ரணவத் நடித்த 'தலைவி' படத்தின் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்படுத்தவே தியேட்டர்கள் திறப்பைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்று 'தலைவி' ஹிந்திப் படம் ஓடிடியில் வெளியான தினத்தில் மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் திறப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளதையும் சிலர் சம்பந்தப்படுத்தி கமெண்ட் செய்துள்ளார்கள்.
இருக்கைகள் அனுமதி, மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர். அதன் பிறகே தியேட்டர் அறிவிப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.